Sunday, January 1, 2012

மானிப்பாயில் 16 நாள் குழந்தையை 50 ஆயிரம் ரூபாவிற்கு விற்ற கொடூர மாமியார்!!!

Sunday, January, 01,2012
இலங்கை::யாழ் மானிப்பாயில் பிறந்து 16 நாட்களே ஆன குழந்தையை தாயாரிடம் இருந்து கதறக் கதறப் பறித்து 50 ஆயிரம் ரூபாவிற்கு விற்ற கொடூர மாமியாரை சங்கானைப் பகுதியில் வைத்து பொலிசார் கைது செய்தனர்.

25 வயதுடை இளம் பெண்ணின் மாமியார் 16 நாட்கள் நிரம்பிய ஆண்குழந்தையை தாய் கத்துவதையும் பொருட்படுத்தாது பெண் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாவிற்கு விற்றதாகத் தெரியவருகின்றது. இதையடுத்து குறித்த குழந்தையின் தாய மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

பொலிசார் குழந்தையை விற்பணை செய்த மாமியாரையும் குழந்தையை வாங்கிய அச்சுவேலியைச் சேர்ந்த குடும்பத்தினரையும் கைது செய்து மல்லாகம் நீதிமன்றில் ஆயபடுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment