Sunday, December 25, 2011

துப்பாக்கிப் பியோகத்தில் பிரித்தானிய பிரஜை உயிரிழப்பு!

Sunday, December 25, 2011
இலங்கை::தங்காலை சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் பிரித்தானிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை அந்த ஹோட்டலில் துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த வெளிநாட்டு பெண்ணொருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment