Tuesday, December,27, 2011இலங்கை::கடந்த 9 ம் தி;கதி யாழ்ப்பாணத்தின் அச்சுவேலி பிரதேசத்தில் காணாமல் போன லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பில் துரிதமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நேற்று காவல்துறை மாஅதிபர் என்.கே.இளங்ககோனிடம் கோரிக்கை மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமாரவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களின் உறவினர்களால் யாழ்ப்பாணம், அச்சுவேலி மற்றும் கொஸ்கம காவல் நிலையங்களில் 3 முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment