Sunday, December 04, 2011புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வுகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தோல்வியைக் கண்டிருப்பதாகவும், இதனால் புலிகளின் மூன்று முக்கிய தலைவர்களுக்கிடையில் பாரியளவில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது.
மேற்படி தகவலினை லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகள் தோல்வியடைந்துள்ளமையினால் மூன்று முக்கிய புலித் தலைவர்களுக்கு இடையில் பாரியளவில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மோதலாக உருவெடுத்துள்ளதாகவும் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பு தலைவர்களுக்கு இடையிலான மோதல்களினால் இம்முறை புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகள் விசேடமாக இடம்பெறவில்லை என்றும் புலனாய்வுத்துறையினர் குறிப்பிட்டுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடியவன், விநாயகம் மற்றும் ருத்ரகுமார் ஆகியோருக்கு இடையில் மோதல் வெடித்துள்ளது என்றும் இலங்கை புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர் எனவும் எனினும், இந்த செய்தித்தொடர்பாக புலிகளின் தரப்பில் இருந்து தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment