Tuesday, December 13, 2011

போதியளவு கையொப்பங்கள் திரட்டப்பட்டால் சரத் பொன்சேகா விவகாரத்தில் தலையீடு செய்யத் தயார் – அமெரிக்கா!

Tuesday, December 13, 2011
போதியளவு கையொப்பங்கள் திரட்டப்பட்டால் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பில் தலையீடு செய்யத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பில் இணையத்தின் ஊடாக, அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட உள்ளது. சரத் பொன்சேகாவின் குடும்ப அங்கத்தினர்கள் இந்த மகஜருக்கான கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

25000 கையொப்பங்கள் திரட்டப்பட்டால் சரத் பொன்சேகா விவகாரத்திலை தலையீடு செய்ய முடியும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

உலகின் எந்தவொரு நாட்டிலிருந்தும் 25000த்திற்கும் மேற்பட்ட கையொப்பங்களுடன் மகஜர் அனுப்பி வைக்கப்பட்டால் அந்த விடயம் தொடர்பில் வெள்ளை மாளிகை தலையீடு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத் பொன்சேகாவின் சிரேஸ்ட புதல்வி அப்சரா பொன்சேகா இந்த மகஜருக்கான கையொப்பங்களை திரட்டி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment