Saturday, December 31, 2011

சிவில் உரிமைகளுடன் சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் - கரு, சஜித்!

Saturday,December,31,2011
இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிவில் உரிமைகளுடன் விடுதலை செய்யப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய தினம் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்கோவை, சஜித் பிரேமதாச மற்றும் கரு ஜயசூரிய ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் நோக்கில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் கிளர்ச்சிக் குழுவினர் பூரண ஆதரவை வழங்குவதாக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரஜை என்ற ரீதியில் அனுபவிக்கக் கூடிய சகல சிவில் உரிமைகளுடனும் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

இவ்வாறு சிவில் உரிமைகள் முடக்கப்படாது விடுதலை செய்யப்பட்டால் சரத் பொன்சேகா செயற்பாட்டு அரசியலில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment