Friday, December 02, 2011இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரியாவிடை அழைப்பில் இலங்கை பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்!
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திருமதி.கேத் குளுக்மன் கொழும்பிலான தனது சேவைக்காலத்தை நிறைவு செய்ததன் பொருட்டு பிரியாவிடை அழைப்பின் பேரில் (டிச. 01) மாலை பாதுகாப்புச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷவை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் பாதுகாப்புச் செயலாளருக்கும் திருமதி.கேத் குளுக்மனுக்கும் இடையில் இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள் குறித்தான ஓர் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
செயலாளர் நாட்டிற்கான அவரது சேவையை பாராட்டி ஒரு சிறப்பு ஞாபகர்த்தப் பரிசிலை வழங்கிவைத்தார்.
No comments:
Post a Comment