Sunday, December 4, 2011

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண உருவாக்கியிருக்கும் நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் கலந்துகொள்ள விடுத்த அழைப்பை(புலி)கூட்டமைப்பு நிராகரித்திருக்கிறது!

Sunday, December 04, 2011
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண உருவாக்கியிருக்கும் நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் கலந்து கொள்ள வருமாறு விடுத்த அழைப்பை தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பு நிராகரித்திருக்கிறது.

அரசு கூட்டமைப்புடன் வியாழனன்று நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது இந்த யோசனையை முன்வைத்ததாகவும் ஆனால் இரு தரப்புக்களுக்கும் இடையே தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தைகளின் முடிவில் காணப்படும் இணக்கப்பாடை இந்த தெரிவிக்குழுவின் முன்னர் வைத்து அதன் பின்னர் அந்தக் குழுவில் அதைப் பரிசீலிக்கும் போது அதில் பங்கு பெறுவது குறித்து யோசிக்கலாம் என்று தாங்கள் கூரியதாக தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறினார்.

அரசு தரப்பில் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆகிய இரு வழிமுறைகளுமே இணையாக நடக்கலாம் என்று கூறப்பட்டதா அல்லது அரசு இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை பேச்சுவார்த்தைகளுக்கு மாற்றாக முன்வைக்கிறதா என்று கேட்டதற்கு பதிலளித்த சம்பந்தன் அரசு இது வரை தங்களிடம் இரு தரப்புப் பேச்சுவார்த்தை களைக் கைவிடவேண்டும் என்று கூறவில்லை என்றார்.

இது வரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்பட்டு விட்டதாகச் சொல்ல முடியாது. ஆனால் எந்த விஷங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்பது குறித்து கண்டறியப்பட்டிருக்கிறது என்றார் சம்பந்தன்.

பேச்சு வார்தைகள் இணக்கம் இன்றி நிறைவு!

தம்முடன் நடத்தப்பட்டு வந்த பேச்சுவார்த்தைகளை, அரசாங்கம் ஒத்திவைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் (புலிகளின்)கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிறகும் அரசாங்கத்திற்கும் இடையே நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் உரிய இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றதாக (புலி)கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் பிரேம சந்திரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment