Saturday, December 31, 2011

குடிமகன்’களுக்கு புத்தாண்டு செய்தி ‘பார்’ திறப்பு நேரம் 30 நிமிடம் நீட்டிப்பு!!!

Saturday,December,31,2011
சென்னை : டாஸ்மாக் பார் திறந்திருக்கும் நேரம் 30 நிமிடங்கள் நீட்டிப்பு செய்யப்படுகிறது. தமிழகத்தில் 6,690 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்குகின்றன. இதில் 4,506 கடைகளோடு பார்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலை நேரம் காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணி மட்டுமே. இதனால், இரவு 10 மணிக்கு மதுபான கடைக்கு வந்து மதுபானம் வாங்குபவர்கள், அதை வைத்து குடிக்க இடமில்லாமல் அல்லாட வேண்டிய நிலை இருந்தது.

இதுகுறித்து, வாடிக்கையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் சார்பில், டாஸ்மாக் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை யில் நடந்த டாஸ் மாக் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில், இந்த முறையீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, டாஸ்மாக் பார் வேலை நேரத்தை இரவு 10 மணியிலிருந்து 10.30 மணி என்று நீட்டிப்பு செய்வது. பாருக்கான வாடகை கட்டணம் இதுநாள் வரை 2.5 சதவீதம் என்று வசூலித்ததை, ஒரு சதவீதம் குறைத்து 1.5 சதவீதமாக வசூலிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுகள் அந்தந்த டாஸ்மாக் கடைகளுக்கு விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது.

No comments:

Post a Comment