Wednesday, November 30, 2011

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை விடுதலை செய்யாது போனால் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக போர் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும்-அமெரிக்கா!

Wednesday, November 30, 2011
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை விடுதலை செய்யாது போனால் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக போர் குற்றச்சாட்டுகளை சுமத்த போவதாக அமெரிக்காவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் அலுவலகத்தின் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பொன்றை அடுத்து, தூதுவர் பெட்ரீசிய புட்டினஸை சந்திக்க சென்றிருந்த போது, அமெரிக்க தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் அமெரிக்க தூதுவர் கலந்துக்கொள்ளவில்லை. எனினும் அமெரிக்க தூதரகத்தின் உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment