Tuesday, November 29, 2011

பொன்சேக்காவுக்கு எதிரான ஹைகோப் விவகார வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது!

Tuesday, November 29, 2011
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஹைகோப் விவகார வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஹைகோப் விவகார வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது.

பொன்சேக்காவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கின் சாட்சியங்களை, முன்னாள் இராணுவத் தளபதி சார்பாக பிரசன்னமாகிய சட்டத்தரணி ருக்ஷான் நாணயக்கார மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இராணுவ நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையும், மேல் நீதிமன்ற வழக்கு விசாரணையும் ஒரே சம்பவம் தொடர்பானவை என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே இந்த சாட்சியங்கள் சமரப்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள சட்டத்தின் பிரகாரம் ஒரே சம்பவம் தொடர்பில், ஒருவருக்கு எதிராக இரண்டு வழக்குகளை தாக்கல் செய்ய முடியாது என பிரதிவாதி தரப்பில் ஏற்கனவே அடிப்படை ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இராணுவ நீதிமன்றத்திலும், மேல் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் ஒரே மாதிரியானவை எனின் அதனை நிரூபிக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment