Wednesday, November 30, 2011

யாழ்பல்கலைக்கழக மாணவன் வேதாரணியம் லத்தீஸ் கடத்தப்பட்ட சம்பவத்திற்கும் படைத்தரப்பிற்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை!

Wednesday, November 30, 2011
யாழ்பல்கலைக்கழக மாணவன் வேதாரணியம் லத்தீஸ் கடத்தப்பட்ட சம்பவத்திற்கும் படைத்தரப்பிற்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லையென யாழ்.மாவட்ட இராணுவ தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பினில் தெரிவித்துள்ளது.குறித்த மாணவன் கடத்தப்பட்டமை தொடர்பினில் சில ஊடகங்கள் தம்மீது தெவையற்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாகவும் இச்செய்திக்குறிப்பினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பொதுமக்களுக்கும் படைத்தரப்பிற்குமிடையே நிலவி வரும் உறவினை சீர்குலைக்கும் வகையினிலேயே சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பு கவலை வெளியிட்டுள்ளது. ஆயினும் தான் கடத்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள மாணவன் வேதாரணியம் லத்தீஸ் ஆனால் படையினரோ பொலிஸாரோ தொடர்பு பட்டிருக்கவில்லையென கூறியுள்ளதாகவும் அச்செய்திக்குறிப்பினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment