
தடைசெய்யப்பட்ட புலிகளின் செயற்பாட்டாளர்கள் இருவரின் உறவினர்களால் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான அறிவிப்பாணை வழங்கப்பட்ட விதத்தை வீடியோவாக பதிவுசெய்து, அதனை யூ டியூப் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளமை சட்டவிரோதமானது எனவும் அத்துடன் வழக்கை உடனடியாக தள்ளுப்படி செய்யுமாறும் கோரி, சட்டத்திரணி திமோத்தி நெல்சன், நேற்று (03) நியூயோர்க் நீதிமன்ற நீதிபதி சோல் ஒவுன்ஸிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.
சவேந்திர சில்வா, வியன்னா இணக்கப்பாடுகளுக்கு அமைய சிறப்புரிமைகளை பெற்றுள்ள தூதரக அதிகாரி எனவும் இதனால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுவது செல்லாது எனவும் நெல்சன் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட 4 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு ஒன்றை அமெரிக்க நீதமன்றம் நிராகரித்திருந்தாகவும் அவர் தனது மகஜரில் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment