Friday, November 4, 2011

இலங்கையின் உள்விவகாரங்களில் மலேசியா தலையீடு செய்யாது-மலேசியா பிரதி வெளிவிவகார அமைச்சர் கோஹிலன் பிள்ளை!

Friday, November 04, 2011
இலங்கையின் உள்விவகாரங்களில் மலேசியா தலையீடு செய்யாது என அந்நாட்டு பிரதி வெளிவிவகார அமைச்சர் கோஹிலன் பிள்ளை தெரிவித்துள்ளார்.மனித உரிமை மீறல் உள்ளிட்ட இலங்கையின் உள்விவகாரங்களில் மலேசியா தலையீடு செய்யாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பொருளாதாரம், முதலீடு, மனித மூலதனம் உள்ளிட்ட விடயங்களில் இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேண உத்தேசிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று திபெத் தொடர்பான விவகாரங்களிலும் தலையீடு செய்யப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment