Tuesday, November 22, 2011

மட்டக்களப்பு உன்னிச்சை பிரதேசத்தில் குகை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு!

Tuesday, November 22, 2011
மட்டக்களப்பு உன்னிச்சை பிரதேசத்தில் குகை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை ஆயித்தியமலைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

உன்னிச்சையில் மக்கள் நடமாட்டம் இல்லாத யானைக் காட்டுப்பிரதேசத்திலுள்ள குகையொன்றில் உரப் பைகளினால் பொதியிடப்பட்ட நிலையில் ரி 81 ரக தன்னியக்க துப்பாக்கிகள் 14 ஐ கைப்பற்றியதாக ஆயித்தியமலைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.பண்டார தெரிவித்தார். ரி 81 ரக தன்னியக்க துப்பாக்கிகளை விமானப்படையினரே உபயோகிப்பதாகவும் அவர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் துருப்பிடித்த நிலையில் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment