Friday, November 11, 2011கல்முனை நகரில் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஆறு இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இந்தியப் பிரஜைகள் சுற்றுலா விஸாவை பயன்படுத்தி நாட்டிற்கு வருகை தந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
அம்பாறை - மல்வத்த பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள், மேலதிக விசாரணைகளுக்காக கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment