Tuesday, November 29, 2011

முடிவை திரும்ப பெறாவிட்டால் நாடாளுமன்றத்தை நடக்கவிடமாட்டோம் : பா.ஜ.க.!

Tuesday, November 29, 2011
புதுடெல்லி : சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை திரும்ப பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி திட்டவட்டமாக கூறியுள்ளது. புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் முடிவை திரும்ப பெறாவிட்டால் நாடாளுமன்றத்தை நடக்கவிடமாட்டோம் என்றும் கூறியுள்ளார். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் சுஷ்மா தெரிவித்துள்ளார். எனவே கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவிப்பதால் மத்திய அரசு தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என்றும் சுஷ்மா வலியுறுத்தியுள்ளார். இதனிடையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் எம்.பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் 6 வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது குறித்தும் அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment