Tuesday, November 29, 2011

ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பான் கீ மூன்: நவநீதம் பிள்ளைக்கு அனுப்புவது சிறந்ததாகும்-மஹிந்த சமரசிங்க!

Tuesday, November 29, 2011
ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பான் கீ மூன்: நவநீதம் பிள்ளைக்கு அனுப்புவது சிறந்ததாகும்-மஹிந்த சமரசிங்க!

ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அதன் பிரதிகளை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்துக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கும் சமர்ப்பிப்பது சிறந்ததாகும் என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment