Sunday, November 27, 2011இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தேசிய ரீதியில் தண்டனை வழங்கப்பட வேண்டியது அவசியம் என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் நடவடிக்கை எவ்வாறு அமையும் என்பதனையே அவதானிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் நடைபெறும் நாளாந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசிய ரீதியில் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment