Thursday, November 3, 2011

அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நடத்திவரும் பேச்சுக்களை உடனடியாக கைவிடவேண்டும்-ஹெல உறுமய!

Thursday, November 03, 2011
அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நடத்திவரும் பேச்சுகளுக்கு கடும் எதிர்ப்பை வெளியிடும் ஜாதிக ஹெல உறுமய, இப்பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் இலங்கையின் இறைமைக்கு எதிராகச் செயற்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அரச தரப்பினர் பேசவேண்டிய அவசியமே இல்லை என்றும் கூட்டமைப்பை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க வீரகேசரிக்குத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment