Wednesday, November 30, 2011

இலங்கை இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு படையினரே பதில் அளிப்பர் - ஜகத் ஜயசூரிய!

Wednesday, November 30, 2011
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் சில பக்கங்களில் இலங்கை இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், முப்படையினர் இணைந்து, விசேட அறிக்கையொன்றை கையளிக்க உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

முப்படையினரால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையின் இறுதி தொகுப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையின் போது, முப்படையில் எப்படி படை நடவடிக்கைகளை மேற்கொண்டனல் என்பது பற்றிய உரிய தகவல்களை இந்த அறிக்கை மூலம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கவிருப்பதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

சபுகஸ்கந்த பாதுகாப்புச் சேவை பாடசாலையில், நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment