Sunday, October 9, 2011

Weekend Special.. ரிலாக்ஸ் ப்ளீஸ்!.

ராஜபாட்டையின் ஒரு பாடல் விளம்பரம்!

தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் ராஜபாட்டை படத்தின் ஆடியோவை வெளியிடும் முன் பாடலை மட்டும் வெளியிட தீர்மானித்துள்ளனர். இந்தப் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக விக்ரம் நடித்துள்ளார். தீக் ஷா சேத் ஹீரோயின். யுவன் இசையமைத்துள்ளார். ஒரு பாடலை மட்டும் விளம்பரத்துக்காக வெளியிடுவது தமிழில் க்ளிக்காகியிருக்கிறது. வானம் படத்தில் இந்த புதிய விளம்பர யுக்தியை சிம்பு தொங்கி வைத்தார். மங்காத்தாவில் வெங்கட்பிரபு இதனை தொடர்ந்தார்.
=====================================================================================

நடிகை ஜோதிர்மயிக்கு விவாகரத்து!

வெடிகுண்டு முருகேசன் படத்தில் ஹீரோயினாக நடித்த ஜோதிர்மயி தனது கணவ‌ரிடமிருந்து விவாகரத்து பெற்றிருக்கிறார். இதற்கான உத்தரவை திருவனந்தபுரம் நீதிமன்றம் வழங்கியுள்ளது. சுந்தர் சி. ஹீரோவாக அறிமுகமான தலைநகரம் படத்தில் ஜோதிர்மயி ஹூரோயின் ஆனார். அவருக்கும் அவரது கணவருக்கும் இடையில் சண்டை இருந்து வந்தது. இந்நிலையில் விவாகரத்து கோ‌ரி ஜோதிர்மயியின் கணவர் திருவனந்தபுரம் குடும்பல நல நீதிமன்றத்தில் மனு அளித்தார். ஜோதிர்மயியும் விவாகரத்துக்கு சம்மதம் தெ‌ரிவித்ததால் நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.
=====================================================================================

இன்டர்நெட்டில் கசிந்தது மடோனாவின் டாப்லெஸ் படங்கள்!

பாப் பேரழகி மடோனாவின் டாப்லெஸ் புகைப்படங்கள் இன்டர்நெட்டில் கசிந்துள்ளது. இந்தப் படங்களை அவரது முன்னாள் காதலரான ஜீஸஸ் லஸ் லீக் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பாப் உலகின் தேவதையாக வலம் வந்து கொண்டிருப்பவர் மடோனா. இவருக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் 3 வருடங்களுக்கு முன்பு டபிள்யூ என்ற இதழுக்காக புகைப்பட ஷூட்டிங் நடந்தபோது எடுக்கப்பட்ட சில டாப்லெஸ் படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகைப்பட ஷூட்டிங்குக்குத் தயாராகிக் கொண்டிருந்த மடோனாவின் படங்கள் இவை. இதில் மேக்கப் இல்லாமல் காட்சி தருகிறார் மடோனா. அங்கங்கள் தெரியும்படியான பிரா, தலையில் விக் உள்ளிட்டவற்றுடன் காணப்படுகிறார் மடோனா. மேலும் பேன்டீஸ் அணிந்தபடி இருக்கையில் அமர்ந்திருக்கும் மடோனா, ஒரு படத்தில், கண்ணாடியின் பக்கம் திரும்பி உடை மாற்றுவது போல உள்ளது.

பிரேசிலில் உள்ள ஹோட்டல் ரூமில் வைத்து இந்தப் படங்களை ஜீஸஸ் லஸ் எடுத்ததாக கூறப்படுகிறது. எனவே இந்தப் படங்களை அவர்தான் கசிய விட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

50 வயதாகும் மடோனாவின் வயதில் பாதி வயதுடையவர்தான் ஜீஸஸ். இவரும், மடோனாவும் தீவிரமாக காதலித்து வந்தனர். பின்னர் பிரிந்து விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
=====================================================================================

எஸ்.ஏ.சி, கேயாருடன் 'பவர் ஸ்டார்' மோதும் தயாரிப்பாளர் சங்க தேர்தல்- விறுவிறு வாக்கு!

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் போலீஸ் பாதுகாப்புடன் இன்று நடந்தது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. ஏற்கனவே தலைவர் பதவி வகித்து வந்த ராம நாராயணன், தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்தல் இன்று நடக்கிறது. எஸ்.ஏ.சந்திர சேகரன் தலைமையில் ஓர் அணியும் கேயார் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகிறது. தலைவர் பதவிக்கு எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார், சீனிவாசன் போட்டியிடுகின்றனர்.

சந்திரசேகர் அணியில் கதிரேசன், ராதாகிருஷ்ணன் துணை தலைவர்கள் பதவிக்கும், கே.ஆர்.ஜி, தேனப்பன் செயலாளர்கள் பதவிக்கும், எஸ்.தாணு பொருளாளர் பதவிக்கும் மற்றும் 21 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். கேயார் அணியில் துணை தலைவர்கள் பதவிக்கு டி.ஜி.தியாக ராஜன், டி.சிவா, செயலாளர்கள் பதவிக்கு கே.முரளிதரன், ஏ.எம்.ரத்னம், பொருளாளர் பதவிக்கு அன்பாலயா பிரபாகரன் மற்றும் 21 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள பிலிம்சேம்பரில் காலை 9.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு என தனித்தனியாக வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. தயாரிப்பாளர்கள் கியூவில் நின்று ஓட்டு போட்டனர். நடிகை ராதிகா, நடிகர்களும் தயாரிப்பாளர்களுமான பிரகாஷ்ராஜ், ராஜேஷ், நட்ராஜ், தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார் உள்ளிட்ட அவர்கள் அணியினர் வாக்களித்தனர்.

தேர்தலையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாலை 4.30 மணிவரை வாக்குப்பதிவு நடக்கிறது. பின்னர் 5.30 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. அதன்பின் புதிய நிர்வாகிகள் யார் என்பது தெரிந்துவிடும்.
=====================================================================================

51 வயது நடிகரின் 17 வயது மனைவி- வாய் பிளக்கும் ஹாலிவுட்!

ஹாலிவுட் நடிகர் டோக் ஹட்சின்சனுக்கு வயது 51 ஆகிறது. இவரது மனைவி கர்டனி ஸ்டோடனுக்கோ வெறும் 17தான். இந்த ஜோடியின் காதல் குறித்துதான் இப்போது ஹாலிவுட் ரசிகர்கள் படு பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். எப்படி 'செட்' ஆனது இந்த வித்தியாசக் காதல் என்பதுதான் அவர்களது பரபரப்புக்குக் காரணம்.

ஆனால் ஹட்சின்சன் இதுகுறித்து அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக, தனது மனைவியின் அழகு, கவர்ச்சி குறித்து பெருமிதமாக பேசி வருகிறார்.

கர்ட்னி ஸ்டோடனின் அழகும், கவர்ச்சியும் வெகு பிரபலமானது. 17 வயதேயானாலும் கூட 'அதி பயங்கர' கவர்ச்சியுடன் அவர் வலம் வருகிறார். அவரது கவர்ச்சியில் 'செயற்கை' ஐட்டங்கள் நிறைய இருப்பதாகவும், குறிப்பாக மார்பக அறுவைச் சிகிச்சையை அவர் செய்து கொண்டு முன்னழகை எடுப்பாக்கியுள்ளதாகவும் பேச்சு நிலவுகிறது.

ஆனால் கர்ட்னி இதை முற்றாக மறுத்துள்ளார். என்னிடம் இருக்கும் எல்லாமே 'ஒரிஜினல்'தான் என்று அடித்துக் கூறுகிறார் கர்ட்னி. தனது மனைவியின் அழகு அம்சங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறுவதைப் பார்த்து டென்ஷனாகி விட்ட ஹட்சின்சன் உடனடியாக ஒரு போட்டோ ஷூட்டுக்கு ஏற்பாடு செய்தார்.

அதில் அவரும், கர்ட்னியும் தோன்றுகிறார்கள். இந்த போட்டோ ஷூட்டின்போது வெள்ளை நிற பிகினியில் படு கவர்ச்சிகரமாக தோன்றி போஸ் கொடுத்துள்ளார் கர்ட்னி. தனது உடல் அழகியல் அம்சங்கள் அனைத்துமே உண்மையானவை, ஒரிஜினலானவை என்பதை வெளிக்காட்டும் வகையில் அந்த போஸ்கள் உள்ளன.

கடற்கரையிலும், நீச்சல் குளத்திலும் வைத்து இந்த புகைப்படகங்களை எடுத்துத் தள்ளியுள்ளனர். இந்த சூடான படங்கள்தான் இப்போது ஹாலிவுட்டின் படு சூடான விவாதமாக மாறியுள்ளது.

இந்த வித்தியாச தம்பதிகளுக்கு இடையிலான வயது வித்தியாசம் 39 ஆண்டுகளாக இருந்தாலும் கூட இவர்களின் திருமண வாழ்க்கை படு ஜோராக இருக்கிறதாம் - கண்ணடித்தபடி கூறுகிறார் கர்ட்னி. கடந்த ஜூன் மாதம் தான் லாஸ் வேகாஸில் வைத்து கர்ட்னியைக் கைப்பிடித்தார் ஹட்சின்சன்.

ஆனால் நிவேதா மாகாண திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கும், பெண்ணுக்கும் குறைந்தது 18 வயதாகியிருக்க வேண்டும். இருப்பினும் கர்ட்னியின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளனர். இதனால் திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்ட்னியின் தாயார் கிறிஸ்டா இதுகுறித்துக் கூறுகையில், இந்தத் திருமணத்தை நாங்கள் பூரணமாக ஆதரித்துள்ளோம். ஹட்சின்சன் அருமையான மனிதர். அவரை நாங்கள் நேசிக்கிறோம்.

இருவரும் ஆழமாக நேசிக்கிறார்கள். மனதார காதலிக்கிறார்கள். எனது மகள் திருமணம் செய்த போது அவர் கன்னிப் பெண்ணாகவே இருந்தார். காரணம், அவர் ஒரு சுத்தமான கிறிஸ்தவப் பெண் என்று பெருமையாக கூறியுள்ளார் கிறிஸ்டா...
=====================================================================================

No comments:

Post a Comment