Saturday, October 8, 2011

புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களை விநியோகித்த கனடா சிறையில் உள்ள தமிழர்கள் விடுதலை கோரல்!

Saturday, October 08, 2011
நியுயோர்க் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடிய தமிழர்கள் மூவர் தம்மை விடுதலை செய்யக்கோரி கடிதமொன்றை வெளியிட்டுள்ளதாக நெஸனல் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது..

புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களை விநியோகித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

எவ்வாறாயினும் தாம் இலங்கை தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற நோக்கிலேயே புலிகள் அமைப்புக்கு என உதவியதாக அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், அந்த செயற்பாடு சரியான விடயம் என தெரிவித்துள்ள குறித்த தமிழர்கள், புலிகள் இயக்கத்திற்கு ஆதரவளித்ததன் ஊடாக இலங்கையர்களுக்கு எதிர்கொள்ள நேரிட்ட இன்னல்களுக்கு தாம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளனர்.

இவர்கள் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத் துறை தலைவராக இருந்த பொட்டு அம்மானின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே ஆயுதங்களை விநியோகித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment