Monday, October 10, 2011

சீனோர் நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்!

Monday, October 10, 2011
கடுநேரிய, தெமட்டபிட்டிய சந்திக்கு அருகில் சீனோர் நிறுவனத்தின் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன போக்குவரத்து நெறிசல் ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை மறித்து, டயர்களை கொளுத்தி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

கடற்றொழில் அமைச்சின் கீழ் இயங்கும் சீனோர் நிறுவனத்தை, பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சின் கீழ் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது

No comments:

Post a Comment