Tuesday, October 11, 2011

தெற்காசிய கடற்கரை விளையாட்டு விழா!

Tuesday, October 11, 2011
இலங்கையில் நடைபெறும் முதலாவது தெற்காசிய கடற்கரை விளையாட்டு விழா கடந்த சனிக்கிழமை (ஒக். 08) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை பீச் பார்க்கில் நடைபெறவுள்ளது.

இதற்காக ஹம்பாந்தோட்டை நகரும், விளையாட்டு மைதானமும், தெற்காசிய நாடுகளின் தேசியக் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய எட்டு நாடுகளில் இருந்தும் 400 இற்கும் மேற்பட்ட விளையாட்டு வீர, வீராங்கனைகள் ஹம்பாந்தோட்டைக்கு வருகை தந்துள்ளனர்

No comments:

Post a Comment