Tuesday, October 25, 2011நகைப்புக்குரிய வகையில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. புலிகள் போன்ற கொடிய பயங்கரவாத அமைப்பை இல்லாதொழித்த முதலாவது தலைவருக்கு எதிராக புலி ஆதரவு அமைப்புக்கள் வழக்குத் தொடர முனைப்பு காட்டி வருவதாக ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான ஆதரவான தரப்பினர் ஜனாதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது நகைச்சுவையாகவே அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நீதிமன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குத் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment