Sunday, October 2, 2011

யுத்த பாதிப்புக்குள்ளாக மக்களுக்கு வேலை வாய்ப்பு!

Sunday, October 02, 2011
யுத்தம் காரணமாக பாரிய பாதிப்புக்குள்ளான பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு வேலை வாய்;ப்பினை பெற்று தருவதற்கு தமது அமைப்பு அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஐ ஓ எல். என அழைக்கப்படும் சர்வதே தொழில் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டொங்கிளின் லை இதனை தெரிவித்துள்ளார்.

அண்மையில் வடமாகாணத்திற்கான உத்தியோகபூவ விஜயம் ஒன்றை மேற்கொண்டதன் பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.

வடமாணத்திற்காக தமது விஜயத்தின் போது யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த சிரேஸ்ட அதிகாரிகளுடனும் அவர் பேச்சு வார்தைகள் நடத்தியுள்ளார்.

இது தவிர தொழில் அமைபின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களினை நேரடியாக சென்று அவர் அவதானித்துள்ளார்.

இவரின் விஜயத்தின் போது குறிப்பாக வடமாக பெண்களின் வாழ்வாதராத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு ஏற்ற வகையிலான சுயதொழில் முறைமைகளினை ஏற்படுத்துவது தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் பேச்சு வார்தை நடத்தியுள்ளார்.

தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலமே வறுமையை ஒழிக்க முடியும் என தெரிவித்துள்ள டொங்கிளின் லை, அதற்கு ஏற்ற மனோ நிலையை காண்டுள்ள கடும் உழைப்பாளிகளாக யாழ்ப்பாண மக்கள் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment