Monday, October 31, 2011

பொதுநலவாய உச்சிமாநாடு இலங்கைக்கு மும்முனைகளில் பாரிய இராஜதந்திர வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளது-ஜீ.எல். பீரிஸ்!

Monday, October 31, 2011
பொதுநலவாய உச்சிமாநாடு இலங்கைக்கு மும்முனைகளில் பாரிய இராஜதந்திர வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளது. உச்சிமாநாட்டில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பல்வேறு நெருக்கடிகளும் சாதூர்யமாக முறியடிக்கப்பட்டு பாரிய இராஜதந்திர ரீதியிலான வெற்றியை நிலைநாட்டியுள்ளதென அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பொதுநலவாய உச்சிமாநாடு நேற்று அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நிறைவு பெற்றது.

அடுத்த இந்த மாநாட்டில் பொதுநலவாய உச்சிமாநாட்டை 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்திற்கு மாநாட்டுத் தலைவர்கள் நேற்று அங்கீகாரம் வழங்கினர். அதேநேரம், 2015 ஆம் ஆண்டு மாநாட்டை மொaசியசிலும் 2019 ஆம் ஆண்டு மாநாட்டை மலேசியாவிலும் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் முடிவில் மூன்று பத்திரிகைகளின் ஆசிரியர்களைச் சந்தித்த அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் கூறியதாவது: இலங்கையின் நட்புறவு நாடுகளின் ஒத்துழைப்புக்கள் எங்கள் நாட்டின் நற்பெயருக்கு தீங்கிழைப்பதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன என்று கூறினார். இலங்கையின் கருத்துக்களை செவிமடுத்த பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்கள், இலங்கையின் உண்மை நிலையைப் புரிந்துகொண்டதோடு நாட்டுத் தலைவருக்கு பெரும் மதிப்பையும், கெளரவத்தையும் வழங்கியிருப்பது நாம் பெற்ற பெரும் வெற்றியென்று பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து கனடா அரசாங்கம் எழுப்பிய கேள்விகளுக்கு எங்கள் நாட்டை ஆதரிக்கும் 15 நாடுகளின் உதவியுடன் பொதுநல அமைப்பு அமைச்சர்கள் நடவடிக்கைக் குழுக்கூட்டத்தில் நாம் தக்க பதிலடியை கொடுத்தோம் என்று அவர் கூறினார்.

உச்சிமாநாட்டின் இறுதி மூன்றாவது கூட்டத்தொடரில் பொதுநலவாய நாடு களின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட் டத்தில் கனடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பேர்ட், மனித உரிமைகள் விட யத்தில் இலங்கைக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்ப எத்தனித்தார். அதற்கு நான் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்தேன் என்று பேராசிரியர் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

கனடிய வெளிவிவகார அமைச்சர் பொதுநல அமைப்பு உச்சிமாநாட்டை அரசியல் மயப்படுத்துவதற்கு எடுத்த முயற்சிக்கு பேராசிரியர் பீரிஸ் எதிர்ப்புத் தெரிவிக்கையில், இந்த உயர்மட்டக் கூட்டத்தில் இத்தகைய விடயங்களை எடுப்பது பொருத்தமற்ற செயலென்றும் அவர் தெரிவித்தார்.

யதார்த்தமான நவீன செயற்பாடுகளை நோக்கி பொதுநல அமைப்பு நாடுகள் முன்னேறிக்கொண்டுவரும் இவ்வேளையில் கனடா இவ்விதம் நடந்துகொள்வது வேதனையளிக்கிறது என்று இலங்கை கண்டனக்குரல் எழுப்பியுள்ளது. ஒரு அங்கத்துவ நாட்டில் உள்ளூர் விவகாரங்கள் குறித்து உச்சிமாநாட்டில் கேள்வியெழுப்பு வது சம்பிரதாயத்துக்கு முரணான செயலென்றும் இலங்கை கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

அதேவேளையில் இலங்கை எந்தவொரு நாட்டுடனும் இத்தகைய விடயங்கள் குறித்து பரஸ்பர பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராகவிருக்கின்றது என்ற யதார்த்தையும் நாம் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட நாடுகளுக்குப் புரியவைத்தோம் என்று பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையிலேயே இலங்கையை ஆதரிக்கும் மற்றப் பதினைந்து நாடுகள் இலங்கையின் நிலைப்பாட்டை ஆதரித்தனர். அவ்வேளையில் அமைச்சர்கள் மாநாட்டுக்குத் தலைமைதாங்கிய அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் கெவின் ரட், அங்கத்தவர்களின் மனோநிலை தமக்கு நன்கு புரிந்திருப்பதனால் இலங்கை பற்றிய இந்த சர்ச்சையை இங்கு எடுத்து ரைக்கத் தாம் இடமளிக்கப்போவதில்லை யென்று அறிவித்தார்.

தெற்காசியாவில் பயங்கரவாதத்தை முறியடித்து சாதனைபுரிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கிடைத்த வெற்றியானது இலங்கைக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல; சார்க் நாடுகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியென்று பல தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தெற்காசியப் பிராந்தியத்தில் சமாதானத்தையும், ஸ்திர நிலைமையையும் நிலைபெறச் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றியடைந்தது ஒரு முக்கிய நிகழ்வாகுமென்றும் அவர்கள் கூறினார்.

எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர் ஒருவர் மெல் பேர்ன் நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள மனித உரிமை மீறல் வழக்குக் குறித்து தகவல் தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், அவுஸ்ரேலிய ஊடகங்கள் மேற்கொண்ட அச்சுறுத்தல் நடவடிக்கைகளின் ஒரு செயற்பாடாகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார். ஒரு நாட்டுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவருக்கு இராஜதந்திரி களுக்கான முழு உரிமைக்கும் உத்தரவாத மளிக்கப்பட வேண்டுமென்று இலங்கைத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பை ஏற்றுக்கொண்டே அவுஸ்ரேலிய சட்டமா அதிபர் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று அறிவித்தார் எனவும் அமைச்சர் கூறினார்.

2013ஆம் ஆண்டின் பொதுநல வாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவ தென்ற 2009இல் எடுத்த தீர்மானத்தை உறுதிப்படுத்தியமை இலங்கை அடைந்த மூன்றாவது வெற்றியாகும். பலர் இந்த உச்சிநாட்டை வேறொரு நாட்டில் நடத்து வதற்கு எடுத்த முயற்சியும் இலங்கையின் நேசநாடுகளின் உதவியுடன் முறியடிக்கப் பட்டது.

இலங்கைத் தூதுக்குழுவினர் சர்வதேச சமூகத்துக்கு நாட்டில் பயங்கரவாதம் 2009 மே மாதத்தில் முறியடிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி முழுமையான விளக்கத்தை அளித்தமை குறிப்பிடத்தக்கது.

அமைதி ஏற்பட்டுள்ள எங்கள் நாட்டில் அரசு மக்களிடையே நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்தும் அதேவேளையில், மீள்குடியேற் றப் பணிகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது என்பதை தெளிவாக எடுத்துக்கூறியதாகவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment