Monday, October 31, 2011

இலங்கைக்கு எதிராகச் செயற்படுவதனையும் கண்டனங்கள் தெரிவிப்பதனையும் கனேடிய அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்-ஜீ. எல்.பீரிஸ்!

Monday, October 31, 2011
இலங்கைக்கு எதிராகச் செயற்படுவதனையும் கண்டனங்கள் தெரிவிப்பதனையும் கனேடிய அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.அடுத்த பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை நடத்துவதற்கு முன்னர் இலங்கை தன்மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க வேண்டுமென கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் வலியுறுத்தியதனையடுத்தே அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போர் குற்றம் இடம்பெற்றதாக அபத்தமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ஐநா நிபுணர் குழு அறிக்கைக்கும் கண்டனத்தை தெரிவித்துள்ள பீரிஸ், எது எப்படியிருப்பினும் அடுத்த பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாடு இலங்கையில் இடம்பெறும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, 2013ஆம் ஆண்டு பொது நலவாய நாடுகளின் 23 ஆவது அரச தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடைபெறுமென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment