Friday, October 07, 2011வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு வரையறைக்குட்பட்ட பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கிற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தது. ஆயினும் அவ்வாறான அதிகாரங்களை வழங்குவதற்கு அரச தரப்பினர்களிடையே எதிர்ப்பு இருந்து வந்தது.
இதனிடையே வடக்கு கிழக்கிற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவினாலான அதிகாரத்தை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பின் போது சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment