Thursday, October 27, 2011

தமிழக முதல்வர் ஜெ.விற்கு இலங்கை அமைச்சர் செந்தில்தொண்டைமான் பாராட்டு!

Thursday, October 27, 2011
திருநெல்வேலி:தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டதால் மத்திய அரசு இலங்கை தமிழர்களின் மேம்பாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளதற்கு இலங்கை அமைச்சர் செந்தில்தொண்டைமான் நன்றி தெரிவித்தார்.இலங்கை அரசில் மின்சக்தி,எரிபொருள், இளைஞர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில்தொண்டைமான். இவர் திருச்செந்தூரில் துவங்கிய கந்தசஷ்டி விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்தார். காலையில் திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயில், சாலைக்குமாரசாமி கோயில்களில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

பாளையங்கோட்டையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், இலங்கையில் தற்போது சகஜநிலை திரும்பி உள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெ.,விற்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்காக முதல்வர் கேட்டுக்கொண்டதன்பேரில் மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கியுள்ளது. இதற்காகவும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

இலங்கைக்கு தினமும்15 விமானங்கள் வந்துசெல்கின்றன. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் 60 சதவீதம் பேர் தொழில்கள் துவங்கும் முயற்சியாக வருகின்றனர். இலங்கையில் மின்சார திட்டங்களுக்காக சீனா அரசு பெருமளவில் நிதியுதவி செய்துவருகிறது என்றார். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் குறித்த கேள்விக்கு வேறு துறை அமைச்சரான தாம் கருத்து கூறமுடியாது என்றார். மாலையில் செந்தில்தொண்டைமான் இலங்கை கிளம்பினார்.

No comments:

Post a Comment