Monday, October 31, 2011

இராணுவத்தைச் சேர்ந்த இருவர் கைது!

Monday, October 31, 2011
மாத்தளை தொடகமுவ பகுதியில் ஏழு இலட்ச ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரணுவத்தைச் சேர்ந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தொடகமுவ பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண்ணொருவர் வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வரும்போது சந்தேகநபர்களால் குறித்த பணம் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபர்கள் குறித்த பெண்ணை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment