Monday, October 31, 2011

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்!.

Monday, October 31, 2011
திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், இன்று மாலை நடைப்பெற்றுகொண்டிருக்கிறது. இதனால் திருச்செந்தூரில் ஏராளமானபக்தர்கள் குவிந்துள்ளனர். இங்கு சிறப்புவாய்ந்த கந்தசஷ்டி திருவிழா அக்.,26ம்தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தினமும் காலை,மாலை யாகசாலை பூஜை, தீபாராதனை, சுவாமி வீதியுலா நடந்தது. ஆறாம் நாளான இன்று காலை 6.30 மணியளவில், கடைசி கால யாகசாலை பூஜை நடப்பெற்றது. சூரசம்ஹாரம் முடிந்தபின், ஆறு நாட்கள் சஷ்டி விரதமிருக்கும் ஏராளமான பக்தர்கள், கடலில் புனித நீராடி விரதத்தை முடிப்பர். இதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்து அரசு சிறப்பு பேருந்துகளும், நெல்லையிலிருந்து சிறப்பு ரயில்களும் திருச்செந்தூருக்கு இயக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment