Friday, October 07, 2011அரசாங்கம்-பாதுகாப்பு படையினர் தொடர்பாக புலனாய்வு தகவல்களை திரட்டிய சம்பவங்களுடன் 300 இலங்கையர்கள் தொடர்பு!
இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு படையினர் தொடர்பாக புலனாய்வு தகவல்களை திரட்டிய சம்பவங்களுடன் 300 இலங்கையர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நபர்கள் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இலங்கைக்கு எதிராக போர் குற்றங்களை சுமத்துவதற்கு தேவையான பொய்யான தகவல்களை இந்த நபர்களே வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது.
மேற்படி 300 பேர் அடங்கிய இந்த குழுவினர், செய்மதி தொலைபேசி மூலம் நோர்வே தூதுவர் ஒருவருக்கு இந்த தகவல்களை வழங்கியுள்ளனர். அமெரிக்காவின் ரகசிய ஆவணங்கள் மூலம் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் திவயின கூறியுள்ளது.
No comments:
Post a Comment