Thursday, September 29, 2011

COLOMBO WALL ஒவியத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி!

Thursday,September, 29, 2011
கொழும்பு:உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவ மாணவிகளால் வரையப்பட்டுள்ள ஆசியாவிலலேயே மிக நீளமான COLOMBO WALL ஒவியத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று பார்வையிட்டார்.

1.5 கிலோமீற்றர் நீளமான COLOMBO WALL ஓவியத்தை வரையும் நடவடிக்கை கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமானது.

பேர வாவி அருகிலுள்ள இந்த ஓவியத்தினை மேல் மாகாணத்தின் 140 பாடசாலைகளைச் சேர்ந்த இரண்டாயிரம் மாணவ மாணவிகள் வரைந்துள்ளனர்.

ஓவியத்தை பார்வையிட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மாணவ மாணவிகளுடனும் கலந்துரையாடினார்.

10 ஆண்டுகளுக்குப் பின்னர் கொழும்பு மாநகரம் எவ்வாறு காட்சியளிக்கும் என்ற தமது கற்பனையை இந்த மாணவ மாணவியர் தமது ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment