Friday, September 30, 2011

கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சுமத்தப்பட்ட 6 இலங்கையர்கள் சார்ஜாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்!

Friday, September 30, 2011
கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சுமத்தப்பட்ட 6 இலங்கையர்கள் சார்ஜாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சார்ஜாவில் உள்ள 14 வர்த்தக நிலையங்களில் கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மடிக்கணணி, கையடக்க தொலைபேசி, கடிகாரம் என்பன கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

புதையல் தோண்டியவர்கள் கைது!

உடப்புசல்லாவ ரூபஹ ஓயா பகுதியில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் 10 பேர் நேற்று மாலை பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் புதையல் தோண்டுவதற்காக சந்தேகநபர்கள் பயன்படுத்திய உபகரணங்களுடன் முச்சக்கர வண்டியொன்றையும் பொலிஸார் கையப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்களை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

No comments:

Post a Comment