Wednesday, September 21, 2011

கூரை மீதேறி வைத்தியசாலைப் பெண் சிற்றூழியர்கள் இருவர் போராட்டம்!

Wednesday, September 21, 2011
கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்திலுள்ள கட்டிடமொன்றின் கூரை மீதேறி வைத்தியசாலையின் இரண்டு பெண் சிற்றூழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநோயாளர் பிரிவில் பணியாற்றிய மூன்று பெண் சிற்றூழியர்கள் வேறொரு நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் டொக்டர் சுஜாதா சேனாரத்ன கூறினார்.

அண்மையில் வெளிநோயாளர் பிரிவிலுள்ள இரண்டு சிற்றூழியர் குழுக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தததாகவும் அவர் தெரிவித்தார்.

அன்றையதினம் பெண் சிற்றூழியர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment