Tuesday, September 20, 2011

புலி சந்தேக நபர்களில் ஒரு தொகுதியினர் மெகஸின் சிறைச்சாலைக்கு மாற்றம்!

Tuesday, September 20, 2011
புலி சந்தேக நபர்களில் ஒரு தொகுதியினர் மெகஸின் சிறைச்சாலைக்கு மாற்றம்!

விளக்க மறியல்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகள் அமைப்பைச் சேர்ந்த சந்தேக நபர்களில் ஒரு தொகுதியினர் நேற்று மெகஸின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏனையோரும் இரண்டொரு தினங்களில் வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படவுள்ளனர் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு விளக்கமறியல்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க சந்தேக நபர்களான 240 பேரிலேயே 100 பேர் நேற்று மெகஸின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் தற்போது மெகஸின் சிறையில் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 138 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் சிங்களக் கைதிகளால் தமிழ்க் கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்தே பாதுகாப்பின் நிமித்தமாக இவர்கள் வேறு பிரிவுகளுக்கு மாற்றம் செய்யப்டுகின்றனர் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

No comments:

Post a Comment