Tuesday, September 20, 2011

ஜனாதிபதி நிவ்யோர்க் சென்றடைந்துள்ளார்:நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி, கிளின்டன் சூழலியல் மன்றத்தின் அமர்வில் பங்கேற்பு!

Tuesday, September 20, 2011
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக சென்ற ஜனாதிபதி நேற்று மாலை நிவ்யோர்க் நகரை அடைந்துள்ளார்.

இதன்போது, ஜனாதிபதி மற்றும் அவரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரை, ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி பாலித்த கொஹொன மற்றும் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அமர்வின் பொது சபை அரச தலைவர்களின் உரைகள் எதிர்வரும் 22 ம் திகதி தொடக்கம் ஆரம்பமாகின்றன

நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று கிளின்டன் சூழலியல் மன்றத்தின் அமர்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனால் உலகப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி, அதற்கான தீர்வுகளை வழங்குவதற்காக இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பல நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 66 ஆவது பொதுச் சபை கூட்டத்தொடரில் பங்கேற்கும் பொருட்டு ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் நேற்றிரவு நியூயோர்க் சென்றிருந்தனர்.

நியூயோர்க்கை சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவை, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித்த கோஹன உள்ளிட்ட குழுவினர் வரவேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment