Monday, September 12, 2011

இலங்கை போரை மையப்படுத்தி ஜெய் ஆகாஷ் நடித்துள்ள ஆயுதப் போராட்டம்-படம்!

Monday, September 12, 2011
இலங்கை போரை மையப்படுத்தி ஜெய் ஆகாஷ் நடித்துள்ள ஆயுதப் போராட்டம்-படம்!

இனப்படுகொலைக்கு ஆயுதங்களை சப்ளை செய்ததை மையப்படுத்தி வெளிவந்திருக்கும் படம், ஜெய் ஆகாஷ் நடித்துள்ள ஆயுதப் போராட்டம்.

இந்தப் படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஜெய் ஆகாஷ்தான்.

கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் சில பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ள ஆயுதப் போராட்டத்தில் ப்ரீத்தி மினால், அனிதா ரெட்டி என இரண்டு நாயகிகள். கதை போரைப் பற்றியது என்றாலும் கவர்ச்சிக் காட்சிகளுக்குப் பஞ்சமில்லையாம்.

அனுராதபுரம் விமான நிலையத் தகர்ப்புக் காட்சிகளை இந்தப் படத்தில் பயன்படுத்தியுள்ளனர். இந்தப் படத்தின் முக்கிய ஹைலைட்டாக இதனைக் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் ஜெய் ஆகாஷ்.

தீப்பெட்டி கணேசன் படம் முழுக்க வரும் பாத்திரமாக நடித்துள்ளார்.

ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நந்தன் ராஜ் புதுமுக இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

No comments:

Post a Comment