Friday, September 30, 2011

ஆயுத போராட்டங்களை கைவிட வேண்டுமென புலிகள் அமைப்பின் முன்னாள் ஆயுத முகவர்:தற்போது கனடாவில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும்-சதாஜன் சாராசந்திரன்!

Friday, September 30, 2011
ஆயுத போராட்டங்களை கைவிட வேண்டுமென புலிகள் அமைப்பின் முன்னாள் ஆயுத முகவர்:தற்போது கனடாவில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும்-சதாஜன் சாராசந்திரன்!

யுத போராட்டங்களை கைவிட வேண்டுமென புலிகள் அமைப்பின் முன்னாள் ஆயுத முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சதாஜன் சாராசந்திரன் என்பவரே கடிதமொன்றின் மூலம் தமிழ் இளைஞர் யுவதிகளிடம் இந்த பகிரங்க கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

சதாஜன் தற்போது கனடாவில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஆயுதங்களை ஏந்தி தமிழ் இளைஞர் யுவதிகள் தவறிழைக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

புலிகளுக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருந்த போது சதாஜன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலர் தம்மை பிழையாக வழிநடத்தியதாகவும், தேவையற்ற வகையில் வன்முறை உணர்வுகளைத் தூண்டி விட்டதாகவும் இதனை எண்ணி தாம் வேதனைப் படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குரோத உணர்வுகளையோ வன்முறையையோ யாரும் ஆதரிக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சிறைச்சாலையில் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

புலிகள் அமைப்பு இல்லை என்ற யதார்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சதாஜன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதலான உதவிகளை வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment