Tuesday, September 13, 2011

தமிழ் மக்களுக்கு சுயநிர்ணயம் என்ற தமிழீழ பிரகடனத்தை செய்ய முடியாது- கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்!

Tuesday, September 13, 2011
கடந்த 60 வருடமாக தமிழ் அரசியல் தலைமைகள் எதுவும் செய்யவில்லையென்ற கவலை எங்களுக்கு இருக்கின்றது. இனி ஒரு காலத்திலும் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணயம் என்ற தமிழீழப் பிரகடனத்தை செய்ய முடியாது என்பதும் எனக்கு நன்றாக தெரியும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெவித்தார்.மட்டக்களப்பில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய அவர் தொடர்ந்து கூறியதாவது,கிழக்கு மாகாண சபையும் கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான நிர்வாகம் இருக்கும் காரணத்தினால்தான் நாங்கள் ஒருங்கிணைந்த திட்டங்களுடன் முன்னேறிச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை நாங்கள் தமிழராக இருந்தோ எதிர்க்கட்சியாக இருந்தோ மேற்கொள்ள முடியாது என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்திய அரசாங்கம் உதவிகளைத் தந்தால் கூட நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவில்லையாயின் வரி விதிப்புக்கு இந்தப் பொருட்கள் உள்ளாக்கப்பட்டு அதற்குய ஒதுக்கீடுகள் போய் விடும். அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குவதால் கிடைக்கும் இலாபம் என்ன என்பதை எமது மக்கள் புரிந்து கொள்வதில்லை.

தொடர்ந்து நாங்கள் அரசாங்கத்தை விமர் சத்துக் கொண்டோ, கிழக்கு மாகாணசபையினை தமிழ் தேசிய கூட்டøமப்பு கைப்பற்றும் என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் தமிழர்களால் மட்டும் ஒரு போதும் ஆட்சி அமைக்க முடியாது.

தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம் எல்லாம் எந்த அடிப்படையில் வந்தது என்று கற்றவர்களுக்கு தெரியும். ஒரு மொழி, ஒரு கலாசாரம், ஒரு நிலப்பரப்பைக் கொண்டதாகவே அது அமையும். அவ்வாறானால் முஸ்லிம்கள் தமிழ் தேசியமா? அல்லது மட்டக்களப்பு மாவட்ட மக்களை தனி தேசியமாக நாங்கள் அவர்களை பித்துவிடுவதா?

அவர்களுக்கு எங்கள் பகுதியில் குப்பை கொட்ட அனுமதியில்லையா? அவர்களுக்கு உன்னிச்சை தண்ணீர் போக முடியாதா?அப்படியென்றால் கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும்.இங்கு தனிப்பட்ட போட்டிகளை மட்டும் வைத்துக் கொண்டு நிர்வாகம் செய்ய முடியாது. என்னை முதலமைச்சராக அனுப்பியுள்ளீர்கள் என்ற வகையில் நான் சிறந்த முறையில் செயற்பட வேண்டும்.

ஒரு பொதுப்படையான பொது நோக்கோடு அரசியலை யோசிக்க வேண்டும். அரசியல் என்பது மக்களுக்கு தேவையானது நிலம் நாடும் இந்த விடயங்களை தள்ளிப் போட்டு யாரும் அரசியலைப் பற்றி சிந்திக்க முடியாது.

தனியாக வாக்குகளுக்கு மட்டும் சுயநிர்ணயம் பற்றி பேசினால் எமது மக்களுக்கு எதுவும் செய்துவிட்டு செல்லமாட்டோம்.60 வருடமாக தமிழ் அரசியல் தலைமைகள் எதுவும் செய்யவில்லையென்ற கவலை எங்களுக்கு இருக்கின்றது.இனி ஒரு காலத்திலும் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய என்ற தமிழீழ பிரகடனத்தை செய்ய முடியாது என்ற நிலைமையும் எனக்கு நன்றாக தெரியும்.

ஆகவே அரசியலுக்காகவும் வாக்குகளுக்காகவும் மக்கள் மத்தியில் பிரச்சினைகளை தூண்டி விடாமல் எமது மக்கள் ஒன்றிணைந்து வாழ்கின்றபோது உங்களது சக பொறுப்புக்களையும் உங்களது அடை யாளங்களையும் வலுவாக்குவதற்கான செயற்றிட்டங்களை செய்ய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment