வடக்கு கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள காவற்துறை நிலையங்களுக்கு, சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் பேசக்கூடிய ஆயிரம் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான நேர்முகப் பரீட்சைகள் அடுத்த மாதம் 22 ஆம் திகதி கொழும்பில் நடத்தப்பட உள்ளன.
தமிழ், சிங்களம், முஸ்லீம் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், இந்த இளைஞர், யுவதிகள் காவற்துறையில் இணைத்து கொள்ளப்பட உள்ளதாக சிரேஷ்ட காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனை தவிர தமிழ் இளைஞர்கள் 50 உப காவற்துறை பரிசோதகர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் காவற்துறையில் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதனை தவிர தமிழ் இளைஞர்கள் 50 உப காவற்துறை பரிசோதகர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் காவற்துறையில் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment