Wednesday, September 14, 2011

சுவிட்சர்லாந்துக்கான பிரதித் தூதுவரை இலங்கை மீள அழைக்கவுள்ளது??

Wednesday, September 14, 2011
சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனிக்கான இலங்கைப் பிரதித் தூதுவர் ஜெனரல் ஜகத் டயஸை அரசாங்கம் மீள அழைக்க உள்ளதாக சுவிட்சர்லாந்து செய்திச் சேவையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 57ம் படையணியின் கட்டளைத் தளபதியாக ஜெனரல் டயஸ் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக சுமத்தப்படும் உரிமை மீறல்களுக்கும் ஜகத் ஜயஸிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்திப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்த சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மன் அரசாங்கங்கள் இலங்கையுடன் தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment