Thursday, September 15, 2011

இலங்கை பிரதிநிதிகள் ஆபிரிக்க பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர்!

Thursday,September 15,2011
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 18வது மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக, ஜெனீவா சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு, ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர்.

நேற்றைய தினம் ஆசிய நாடுகளின் பிரதிநிதிகளையும், அணிசேரா நாடுகளின் பிரதிநிதிகளையும் அவர்கள் சந்தித்தனர்.

இதனை அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் போது, இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு அறிக்கைக்கு, எதிர்ப்பு தெரிவுக்குமாறு, இலங்கை தரப்பில் அவர்களிடம் கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment