Thursday, September 15, 2011

இராணுவ முகாமில் குண்டு வெடிப்பு: இருவர் காயம்!

மாதுறு ஓயாவிலுள்ள இராணுவ முகாமில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இரு படை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. பயிற்சி நடவடிக்கையின் போது ஆர். பி.ஜி. ரக குண்டு ஒன்று தற்செயலாக வெடித்ததன் காரணமாக காயமடைந்த இரு படை அதிகாரிகளும் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

துணை லெப்டினன்கள் இருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆர்.பி.ஜீ. குண்டுகளைக் கொண்டு பயிற்சிகளை நடத்திய போது தவறுதலாக குண்டு வெடித்தத்தில் குறித்த இரண்டு துணை லெப்டினன் அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இராணுவத்தினரும், அரலகங்வில காவல்துறையினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment