Friday, September 30, 2011

எட்டியாந்தோட்டை அலிவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

Friday, September 30, 2011
எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலிவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

அலிவத்தை பிரதேசத்தில் நேந்றிரவு 10 - 11 மணி அளவில் இரு குழுவினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் முற்றியதை அடுத்து அங்கு குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட குண்டு ஒன்றே வெடிக்க வைக்கப்பட்டதாக எட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது காயமடைந்த நபர் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பில் எட்டியாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment