Thursday, September 15, 2011

கட்டுநாயக்கவை விமான கேந்திர நிலையமாக மாற்ற வேண்டும்-மஹிந்த ராஜபக்ஸ!

Thursday,September 15,2011
இலங்கையின் வான்பரப்பின் ஊடாக ஊடாக நீண்ட தூரம் பறக்கும் விமானங்கள் கட்டுநாயக்க சரவதேச விமான நிலையத்தில் தரித்து செல்வதற்கு ஏற்ற வகையில் தரமுயர்த்த வேண்டும் என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கையை ஆசியாவின் விமான கேந்திர நிலையமாக மாற்றும் செயற்றிட்டத்தின் கீழ் அந்த இஇலக்கை எட்ட வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் இலங்கையின் போக்குவரத்து துறையின் அபிவிருத்தி தொடர்பாக அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இந்தக்கலந்துரையாடலில் ரயில் சேவைகள் அரச மற்றும் தனியாரதைறை பஸ் சேவைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பெண்களுக்கான பஸ் சேவைகள் அதிகரிப்பது கிராமிய மக்களுக்கான பஸ்சேவைகளை விஸதரிப்பது தொடரபிலும் இதன் போது கலந்திரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு ரயில் மார்க்கங்களின் நிர்மாணம் மற்றும் புனரமைப்பு ரயில் சேவைகளை அதிகரித்தல உள்ளிட்ட பல விடயங்களும் இன்போது கவனம் கசெலுத்த்ப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment