Wednesday, September 21, 2011மது விருந்தின்போது பாலியல் உணர்வை தூண்டியதால் நடிகை சோனாவை நான் கடுமையாக எச்சரிக்கை செய்தேன். அதனால்தான் என் மீது அவர் பொய் புகார் கொடுத்திருக்கிறார் என்று தயாரிப்பாளர் எஸ்..பி.பி.சரண் சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளார். சோனா பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தன்னை போலீசார் எந்நேரமும் கைது செய்யலாம் என கருதிய எஸ்.பி.பி.சரண், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், நான் அமெரிக்காவில் பி.பி.ஏ. பட்டம் படித்துள்ளேன். சினிமாவில் பின்னணி பாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறேன். சமுதாயத்தில் மதிப்புள்ள குடும்பத்தை சேர்ந்தவன் நான். `மங்காத்தா படத்தின் வெற்றியைகொண்டாட நடிகர் வைபவ் என்னை அழைத்தார். அதனால் அவரது வீட்டிற்கு சென்றேன். என்னைபோல் பலரும் அங்கு வந்திருந்தனர். எல்லாரும் இரவு 11 மணிக்கு மேல் மது அருந்த தொடங்கினோம். நடிகை சோனாவும் இந்த மது விருந்தில் கலந்து கொண்டார். அவர் சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடக்கூடியவர். சினிமாவில் வெற்றி பெற முடியாத நிலையில், படங்களை தயாரித்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் பிரச்னையில் சிக்கினார்.
சினிமாவில் என்னுடைய வெற்றி மற்றும் எனது குடும்ப பின்னணியை மனதில் வைத்துக்கொண்டு என்னிடம் சோனா உள்நோக்கத்துடன் நடந்து கொண்டார். கவர்ச்சியால் மயக்கி, பணத்தை பறித்து தன் கடன் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உள்ளதாக தெரிகிறது. அந்த எண்ணத்தோடு குடிபோதையில் என்னிடம் வந்து பேசினார். நல்ல போதையில் அவர் இருந்தார். மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, என்னிடம் பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்து கொண்டார். எனவே நான் சோனாவை கடுமையாக எச்சரித்தேன். அவரை அனைவரது முன்பாகவும் நான் எச்சரிக்கை செய்ததால், அவருக்கு அவமானமாக போய்விட்டது. அதைத்தொடர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். மறுநாள் போலீசில் என் மீது பொய்யான பாலியல் புகாரை கொடுத்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் என்னிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. என்னை விசாரிக்காமலேயே வழக்குப்பதிவு செய்துவிட்டனர். நான் தவறு செய்யவில்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும், என்று சரண் கூறியுள்ளார்.
இந்த மனுவை நீதிபதி ராஜசூர்யா விசாரித்தார். அரசு தரப்பு வக்கீல் பாலசுப்பிரமணியம், மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார். போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு (20ம்தேதி) நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.
No comments:
Post a Comment