Sunday, September 25, 2011

வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரு இந்தியர்கள் கைது!

Sunday, September 25, 2011
வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரு இந்தியர்கள் கைது!


சுற்றுலா நுழைவு அனுமதி பெற்ற நிலையில் இலங்கை வந்த இந்தியர்கள் இருவர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுவாஞ்சிக்குடி போரைதீவு பிரதேசத்தில் துணி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், அவர்கள் விசேட காவல்துறை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கைது செய்யப்பட்ட போது, இவர்கள் வசம் பெண்களின் ஆடைகள் உட்பட பல்வேறு துணி வகைகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரும் நேற்று மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் முன்னிலைப் படுத்தப்பட்ட நிலையில், விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment